கவிஞர்களின் பரம்பரை சொத்து.
கதை சொல்லும் பாட்டிகளின்
கற்பனை சொர்க்கம்.
வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்வியலை கற்பிக்கும் ஆசான்.
பின் பக்கம் முழுதும் இருளும்
முன்பக்கம் சிறு சிறு இருட்டுகளும்
கொண்டிருந்தாலும் அதை மறைத்து
வெள்ளை நிலா என பெயரெடுத்த
கள்ள நிலா அது.
பலகோடி நட்சத்திர வைரங்களுடன்
பயமில்லாமல் பவனி வரும்
இரவின் ராணி அவள்.
இவளுக்குப் பயந்து ஆதவன் கூட
இரவில் வருவதில்லை...
கதை சொல்லும் பாட்டிகளின்
கற்பனை சொர்க்கம்.
வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்வியலை கற்பிக்கும் ஆசான்.
பின் பக்கம் முழுதும் இருளும்
முன்பக்கம் சிறு சிறு இருட்டுகளும்
கொண்டிருந்தாலும் அதை மறைத்து
வெள்ளை நிலா என பெயரெடுத்த
கள்ள நிலா அது.
பலகோடி நட்சத்திர வைரங்களுடன்
பயமில்லாமல் பவனி வரும்
இரவின் ராணி அவள்.
இவளுக்குப் பயந்து ஆதவன் கூட
இரவில் வருவதில்லை...