Tuesday, July 8, 2008

அதிசய உலகில் அலைஸ


Translation of ' ALICE IN WONDERLAND' -The great children novel written by Lewis Carroll

முயல் குழிக்கு கீழே...
அலைசிற்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு நேரம்தான் அந்த ஆற்றங்கரையோரமாக தன் சகோதரியின் பக்கத்தில் சும்மாவே அமர்ந்து கொண்டிருப்பது? அக்கா வசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கூட ஓரிரு தடவை எட்டிப் பார்த்து விட்டாள். அதில் ஏதும் படங்களோ அல்லது குறைந்தது உரையாடல்கள் கூட இல்லை. 'இதெல்லாம் ஒரு புத்தகமா? படங்களோ உரையாடல்களோ இல்லாமல்...?'அலைஸ் மனதிற்குள் அலுத்துக் கொண்டாள்.




அன்றைக்கு வெயில் வேறு கொளுத்திக் கொண்டிருந்ததினால் அவளுக்கு எல்லாவற்றிலும் எரிச்சலாகவே இருந்தது. தன்னருகில் நின்றிருந்த செடியில் பூத்திருந்த காட்டுப் பூக்களை பறித்து மாலை செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறு அதன் அருகில் சென்று மலர்களை பறிக்க ஆரம்பித்த போதுதான் திடீரென சிகப்பு கண்களுடன் வெள்ளை முயல் ஒன்று அவளருகில் ஓடுவதை கண்டாள்.
அடுத்து நடந்தது ஒரு அதிசயம்தான். ஆனால் அலைசிற்கு அது உறைக்கவே இல்லை. அது ஏதோ சாதாரண நிகழ்வு போலத்தான் அவளுக்குத் தோன்றியது. ஏனெனில் அந்த முயல் தனக்குள்ளே 'ஐயோ..ஐயோ...நான் பிந்தக்கூடாது...!'என்று சொல்லிக் கொண்டது அவளுக்கு கேட்டது. (அவள் இதைப் பற்றி பின்னால் யோசிக்கும் போது தான் அதற்காக அந்நேரம் ஏன் ஆச்சரியப் படவில்லை என்று வியந்திருக்கிறாள். ஏனெனில் அப்போது அதனை கேட்பது ஒரு இயற்கையான சம்பவம் போலத் தோன்றியது)


ஆனால் அந்த முயல் தன் சட்டையின் இடுப்பு பையிலிருந்து ஒரு கடிகாரத்தை எடுத்து பார்த்து விட்டு அவசர அவசரமாக பாய்ந்து ஓட ஆரம்பித்த போதுதான் அந்த சம்பவத்தின் வினோதம் அவளுக்கு சுரீரென உறைத்தது. 'இது எப்படி நடக்க முடியும்? ஒரு முயலாவது கடிகாரம் பார்ப்பதாவது...! ' மனது முழுதும் ஆச்சரியங்கள் வெள்ளமென பாய, அதனை பின் தொடர்ந்து அந்த வயலுக்குள் பாய்ந்து ஓடத் தொடங்கினாள். அதிஷ்டவசமாக அந்த முயல் ஒரு புதருக்குள் இருந்த ஒரு பெரிய முயல் குழிக்குள் பாயும் கடைசித் தருணத்தில் அதைக் கண்டுவிட்டாள்.


அவள் அதனை நெருங்கியபோது அது ஒரு பெரிய சுரங்க வழி போல உள் நோக்கி செல்வதைக் கண்டால். குனிந்து அதை பார்த்தவள் திடீரென அதற்குள் விழுந்துவிட்டாள். நேராக சென்ற அந்த சுரங்க வழி திடீரென சரிந்து ஒரு பெரிய கிணறு போன்ற ஒரு பள்ளமாகியது. அவள் நடக்கப் போவதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் மிக மிக மிக ஆழமான அந்தப் பள்ளத்திற்குள் விழத் தொடங்கினாள்.


அந்த பள்ளம் மிக மிக ஆழமாக இருந்ததாலோ அல்லது அவள் மிக மெதுவாக விழுந்து கொண்டிருந்ததாலோ என்னவோ விழுந்துகொண்டிருக்கும்போதே அவளால் தன்னை சுற்றி பார்க்கவும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்கவும் நன்றாகவே நேரம் இருந்தது.
முதலில் அவள் கிழே குனிந்து பார்த்து தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிய முயற்சித்தாள். ஆனால் கீழே மிகவும் இருட்டாக இருந்ததால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பின் அவள் அந்த கிணற்றின் இரு பக்கங்களையும் பார்த்தபோது அவற்றில் பல அலுமாரிகளும் புத்தகத் தட்டுகளும் இருப்பதைக் கண்டாள். ஆங்காங்கே சில வரைபடங்களும் படங்களும் தொங்குவதை அவதானித்தாள். அவள் தன்னருகில் வந்த ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்து பார்த்தாள். அதில் 'ஆரஞ்சு பழச்சாறு' என எழுதப் பட்டிருந்தது. ஆனால் அது வெறுமையாய் இருப்பதை பார்த்து பெரிதும் ஏமாற்றமடைந்தாள். ஆனால் அந்த குடுவையை கீழே போட அவள் விரும்பவில்லை. ஏனெனில் அது யார் மேலாவது அவர்கள் இறந்துவிடுவார்களோ என்று பயந்தாள். எனவே விழுந்து கொண்டிருக்கும்போதே அதனை இன்னொரு அலுமாரித் தட்டில் ஒருமாதிரியாக சமாளித்து வைத்து விட்டாள்.


இப்படி அவள் விழுந்து கொண்டிருக்கும் போது தன் வீட்டை நினைத்துக் கொண்டால். இனி நான் என் வீட்டுப் படிகளில் விழுந்தால் கூட பயப்படமாட்டேன். இனி என்னை வீட்டில் எவ்வளவு வீரமானவள் எனறு நினைப்பார்கள். ஏன் இனி வீட்டுக் கூரையிலிருந்து விழுந்தால் கூட நான் பயப் படமாட்டேன். ( அது உண்மை போலத்தான் தோன்றியது.)

கீழே...கீழே...கீழே....விழுந்துகொண்டே இருந்தாள். அவளது விழுகை ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. "இந்நேரத்திற்கு நான் எவ்வளவு கிலோமீற்றர்கள் விழுந்திருப்பேன்...?"அவள் வாய் விட்டு கேட்டுக் கொண்டாள். 'இப்போது நான் அனேகமாக பூமியின் நடுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருப்பேன் எனறு நினைக்கிறேன். சரி எண்ணிப் பார்ப்போம்...பூமியின் நடுப் பகுதி தரையிலிருந்து நாலாயிரம் மைல்கள் ஆழத்தில் இருக்கிறது. நான் நினைக்கிறேன்...( பாருங்கள்...அலைஸ் இந்த மாதிரி நிறைய விடயங்களை தன் பாடசாலைப் பாடங்களில் படித்திருக்கிறாள். ஆனால் தன் அறிவை சொல்லி பெருமையடித்துக் கொள்ள இது சரியான நேரமும் இல்லை. அத்துடன் சொன்னால் கேட்பதற்கு கூட அங்கு யாருமில்லை. இருந்தாலும் அதை கணித்து பார்த்துக் கொள்ளுவது அவளுக்கு நல்ல பயிற்சியாக இருந்தது. 'ஆமாம், அவ்வளவு தூரமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது அகலாங்கா... அல்லது நெட்டாங்கா என்று தெரியவில்லையே...! ( உண்மையில் அகலாங்கு, நெட்டாங்கு என்றாலே அவளுக்கு என்னவென்று தெரியாது. ஆனால் பெரியவர்கள் போல அதனை சொல்லிக்கொள்ள விரும்பினாள். )


இப்போது அவள் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள். 'நான் அப்படியே பூமியின் நடுப்பகுதியால் துளைத்துக் கொண்டு சென்று அதன் மறு பக்கத்திற்கு போகப் போகிறேன் என்று நினைக்கிறேன். அங்கே தலை கீழாக நடந்து கொண்டிருக்கிற மக்களுக்கு நடுவில் நான் தலை கீழாக போய் நிற்பேன்! எவ்வளவு வேடிக்கையாய் இருக்கும்! ஆனால் 'மாண்புமிகு' கடவுளே...!(இப்போது யாரும் பக்கத்தில் இல்லாதது நல்லதாகப் போய்விட்டது. அது சரியான சொல்தானா என்று தெரியவில்லை!) அங்கே போனவுடன் அங்கே இருக்கும் மக்களிடம் அது என்ன நாடு என்று கேட்க வேண்டும். 'அம்மா...தயவு செய்து இது என்ன நாடு என்று சொல்வீர்களா?' அவள் ஆலயத்தில் முழந்தாளிட்டு மன்றாடுவது போல அப்போதும் முழந்தாளிட முயற்சித்தாள். அந்தரத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது முழங்தாள்படியிடுவதை கற்பனை பண்ணிப் பாருங்கள். உங்களால் செய்ய முடியுமா? ) ஆனால் அப்படிக் கேட்டால் என்னை ஒரு லூசுப் பெண் என்றுதான் நினைப்பார்கள்.யாரிடமும் கேட்கக் கூடாது. எங்காவது அதை எழுதியிருப்பார்கள். அங்கே வாசித்துக் கொள்ளலாம்.


கீழே...கீழே...கீழே...போய்கொண்டேயிருந்தாள். அவளுக்கு செய்வதற்கும் ஒன்றுமில்லை. எனவே மீண்டும் தனக்குத்தானே பேச ஆரம்பித்தாள். 'தினா இன்றிரவு நான் இல்லாமல் மிகவும் கஷ்டப் படபோகிறாள். ( தினா அவளது பூனை.) இன்றைக்கு தேநீர் வேளையில் அவர்கள் அதற்கு பால் கொடுக்க மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ, என் செல்லகுட்டி தினா! நீயும் என்னுடன் விழுந்திருக்கலாம்! ஆனால் இங்கே இந்த அந்தரத்தில் ஒரு எலியும் இல்லையே...ஆனால் நீ வெளவால்களை பிடித்து சாப்பிடலாம்! அவையும் கிட்டத்தட்ட எல்லிகளைப் போலத்தான் இருக்கின்றன. ஆனால் பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா? தெரியவில்லையே...! இப்போது அவளுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. தூக்கக் கலக்கத்தில் உளற ஆரம்பித்தாள். 'பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா?...பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா?...' சில நேரங்களில் 'வெளவால்கள் பூனைகளை சாப்பிடுமா?' உண்மையில் எப்படி மாற்றிக் கேட்டாலும் அந்த இரண்டு கேள்விகளுக்குமே விடை அவளுக்கு தெரியவில்லை. இப்போது அவள் ஒரு அரைகுறைத் தூக்கத்தில் ஒரு அரைகுறை கனவு காண ஆரம்பித்தாள். அவள் தன் தினாவின் கையை பற்றியவாறு நடந்து கொண்டே அதனை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கிறாள். ' தினா, உண்மையை சொல்லு. நீ எப்போதாவது வெளவால் சாப்பிட்டிருக்கிறாயா?' ஆ..!தொம்ப் ..தொம்ப்..அவள் காய்ந்த சருகுகள்,குச்சிகள் கிடந்த ஒரு குவியலில் விழுந்திருந்தாள். அப்பாடி, ஒரு வழியாக அவளது விழுகை முடிந்துவிட்டது.
அலைசிற்கு சின்னக் காயம் கூட ஏற்படவில்லை. விழுந்த அடுத்த கணமே துள்ளி எழும்பிவிட்டாள். மேலே பார்த்தாள். ஆனால் மேலே முழு இருட்டாக இருந்தது. இப்போது அவளுக்கு முன்னால் இன்னொரு சுரங்கப் பாதை இருந்தது. அந்த வெள்ளை முயல் அந்தப் பாதையால் ஓடுவதைக் கண்டாள். இனி ஒரு கணமும் தாமதிக்க முடியாதென உணர்ந்தாள். காற்றுப் போல பாய்ந்து அதன் பின்னால் ஓடினாள். அது ஒரு வளைவில் திரும்பும் போது அது தனக்குள் ' ஐயோ...எவ்வளவு பிந்திவிட்டது...!'என்று சொல்லிக் கொள்வது அவளுக்கு கேட்டது. ஆனால் அந்த வளைவில் அவள் திரும்பி பார்த்த போது அதைக் காணவில்லை. ஆனால் அவள் முன்னால் நீளமான ஒடுக்கமான வராண்டா ஒன்று விரிந்திருந்தது.




அந்த வராண்டாவின் இரு பக்கங்களிலும் நிறைய கதவுகள் காணப்பட்டன. ஆனால் அவை எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. அலைஸ் அந்தப் பள்ளமாய் சரிந்து சென்ற அந்த வராண்டாவின் எல்ல்லாக் கதுவுகளையும் போகும்போது தள்ளி தள்ளிப் பார்த்துக் கொண்டே சென்றாள். எந்த ஒரு கதவும் திறக்காமல் போகவே, சோர்ந்து போய் அப்பாதையின் நடுப் பகுதியால் நடக்க ஆரம்பித்தாள். இதை விட்டு எப்படி வெளியேறப் போகிறேன்?
திடீரென தன் பாதையின் முன்னால் ஒரு மூன்று கால் மேசை இருப்பதை கண்டாள். அது முழுவதும் உறுதியான கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரே ஒரு சிறிய தங்கத் திறப்பு மட்டும் வைக்கப்பட்டிருந்தது. இந்த திறப்பு நிச்சயமாக அந்த வராண்டவிலுள்ள ஏதாவது ஒரு கதவின் திறப்பாகத்தான் இருக்கும் என்று அவள் முதலில் நினைத்தால். ஆனால் ஐயோ பாவம்! ஒன்று பூட்டு மிக பெரிதாக இருந்தது அல்லது திறப்பு மிக சிறிதாக இருந்தது. ஒரு கதவும் திறக்கவில்லை.ஆனால் அவள் அதை இரண்டாவது தடவை சுற்றி வந்த போது திரைச்சீலை ஒன்றைக் கண்டாள். முன்பு அதை அவள் கவனிக்கவில்லை. அதன் பின்னால் ஒரு பதினைந்து இன்ச் உயரமான கதவு இருந்தது. அதில் அந்த தங்கத் திறப்பை நுழைத்து பார்த்தால். என்ன ஆச்சரியம்...அது திறந்து விட்டது!
அலைஸ் அக்கதவை திறந்து பார்த்தாள். அதன் உள்ளே இன்னொரு சிறிய பாதை ஒன்று ஆரம்பித்திருந்தது. அது ஒரு எலி பொந்தை விட மிக சிறிதாகத்தான் இருந்தது. அவள் குனிந்து அந்தப் வழியால் பார்த்தபோது அதன் முடிவில் மிக மிக அழகான தோட்டம் ஒன்று இருப்பதைக் கண்டாள். அதன் அபார அழகில் அவள் மயங்கிப் போனாள். அவள் எவ்வளவிற்கு அந்த இருட்டரையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஏங்கினாளோ அதை விட அந்தத் தோட்டத்திற்குள் போகவேண்டும் எனவும் அதன் மலர்ப் படுக்கைகளை தொட்டு பார்க்கவும் ஏங்கினாள். அனால் அவளால் தன் தலையைக் கூட அதனுடாக நுழைக்க முடியவில்லை. ஐயோ...நான் இந்தத் தோள்கள் இல்லாமல் பிறந்திருக்கலாம்... அல்லது இந்தக் கண்களுக்கு தொலைநோக்கி போல தூரத்தில் இருப்பவற்றை தெளிவாகப் பார்க்கும் சக்தி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...! ஆனால் பொறு, எதற்கும் ஒரு வழி இல்லாமல் போகாது. எதற்கும் ஒரு ஆரம்பம் என்று ஒன்று இருக்கும். அந்த ஆரம்பத்தை கண்டு பிடித்தால் போதும்...அவள் நினைத்தது சரிதான். எந்தவொரு பிரச்சனையின் முதல் முடிச்சை அவிழ்த்தால் போதும். மீதி தானாகவே அவிழ்ந்துவிடும். அதனால் எந்த சாத்தியப்படாத சாதனையையும் சாத்தியமாக்கிவிடலாம்.




அந்த சிறு கதவுக்கு பக்கத்தில் அப்படியே நிற்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. அவள் மறுபடியும் அம்மேசையை நோக்கிச் சென்றாள். வேறு ஒரு திராப்பு அல்லது இப்படி மூடிய கதவிற்குள் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்ற, எப்படி வெளியேற வேண்டும் என விளக்குகின்ற புத்தகம்போன்று ஏதாவது கிடைக்காதா என்ற அறை நம்பிக்கையுடன்தான் சென்றால். இந்தத் தடவை அங்கெ ஒரு சிறிய போத்தல் இருந்தது. (நிச்சயமாக முன்பு அது அங்கெ இருக்கவில்லை என்று அவள் சொல்லிக் கொண்டால்) அப்போத்தலின் கழுத்தை சுற்றி ஒரு பேப்பர் சுற்றியிருந்தது. அதில் மிக அழகாக பெரிய எழுத்துகளில் 'என்னைக் குடி' என்று எழுதப்பட்டிருந்தது.
அது சரி. என்னைக் குடி என்று அது இலகுவாக சொல்லிவிடலாம். அதற்காக உடனே ஏமாந்து பொய் நமது குட்டிப் புத்திசாலி பெண் அதைக் குடித்துவிட மாட்டாள். ம்கூம்...நான் இது நஞ்சா இல்லையா என பரிசோதிக்கவேண்டும்...அப்படி ஏதும் எழுதப்பட்டிருக்கிறதா என பார்த்தால். இப்படி எத்ததனை கதைகள் அவள் வாசித்திருப்பாள். இந்த மாதிரியான நேரங்களில் அவசரப்பட்டு ஏதாவது செய்தால் பூதங்கள் போன்ற ஏதாவது மறைந்திருப்பவை வெளியே வந்து என்னைக் கடித்து சாப்பிட்டு விடும். அதிலும் இது நஞ்சாக இருந்தால் நான் அதோ கதிதான்.
ஆனால் அதில் எந்த இடத்திலும் நஞ்சு என்று எழுதப்பட்டிருக்கவில்லை. எனவே அலைஸ் அதனை சற்று சுவைத்துப் பார்த்தால். அப்பா..அது மிக மிக சுவையாய் இருந்தது. அது ஆப்பிள் ஆரஞ்சு அன்னாசி வாழைப்பழம் என பலவகையான பழங்களின் சாறு கலந்தது போன்ற சுவையாய் இருந்தது. அவள் அதை ஆவலுடன் மட மடவென உறிஞ்சிக் குடித்துவிட்டாள்.
.............................
................................
....................................!
' என்ன ஒரு வினோதமான உணர்வு...!' என்று சொல்லிக்கொண்டாள். நான் இப்போது ஒரு தொலைநோக்கி கருவி அளவு சிறியவளாய் இருந்தால் எப்படி இருந்திருக்கும்?'
உண்மையில் அதுதான் நடந்தது. அவள் அப்படி நினைத்த மறுகணமே அவளது உருவம் மிகச் சிறியதாக மாறியது. அவள் இப்போது வெறும் பத்து இன்ச் உயரமே இருந்தாள். அந்த அழகான தோட்டத்திற்குள் நுழைவதற்கு இருக்கும் கதவிற்கு அளவாக தன் உயரம் மாறிவிட்டதை கண்டதும் சந்தோசத்தில் அவள் முகம் பிரகாசமாகியது. எனினும் இதில் ஏதும் ஆபத்து மறைந்திருக்குமொஎன்று சில நிமிடங்கள் யோசித்தால். இதனால் அவள் சற்று மனமும் தளர்ந்தால். 'இது கடைசியில் எப்படி முடியுமோ?' தனக்குள் கேட்டுக் கொண்டால். ' இந்த உருவத்துடநேயே நான் இந்த இடத்தை விட்டு வெளியேறினால் இதற்கு பிறகு எனக்கு என்னவாகும்? ஒரு மெழுகுதிரி போலத்தான் ஆகிவிடுவேன்!'ஒரு மெழுகுதிரி முழுவதுமாக எரிந்து முடிந்தவுடன் அது எந்த உருவத்தில் இருக்கும்?என்று அவள் யோசித்தால். அப்படி ஒரு உருவத்தை அவள் பார்த்ததாகவே ஞாபகமில்லை.
சற்று நேரம் கழிந்தும் தனக்கு எதுவும் இன்னும் ஆகவில்லை என்று கண்டவுடன் உடனடியாக அந்தத் தோட்டத்திற்குள் நுழையத் தீர்மானித்தால். ஆனால் பாவம் அலைஸ்! கதவை நெருங்கியபோதுதான் தான் அந்தத் தங்கக் திறப்பை எடுக்காமல் மறந்து பொய் வந்திருப்பதை உணர்ந்தால். ஆனால் அவள் அதை எடுப்பதற்காக மேசைக்கு சென்றபோது அந்த திறப்பு எட்ட முடியாத உயரத்திலிருப்பதைக் கண்டால். அந்த கண்ணாடி மேசையில் திறப்பு இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் நிறைய கடினப்பட்டு மேசைக்கால்களில் ஒன்றில் ஏற முயற்சித்தால்.ஆனால் அது மிகவும் வழுக்கியது. மறுபடி மறுபடி அதில் ஏற முயற்சித்து ஒரு கட்டத்தில் மிகவும் களைத்துப் பொய் பாவம் கிலே அமர்ந்து அழ ஆரம்பித்தால்.


"சரி,சரி...இப்படி உட்கார்ந்து அழுவதால் ஒன்றும் நீ சாதித்துவிடப் போவதில்லை...!" அலைஸ் தனக்குத்தானே அதட்டினால். "முதலில் நீ இந்த நிமிடத்தை மறந்து விடு. இதுதான் நான் உனக்கு சொல்லும் ஒரே அறிவுரை...!"அவள் பொதுவாகவே தனக்குத் தானே அறிவுரை குறிக் கொள்ளுவாள். . (ஆனால் எப்போதாவதுதான் அதை பின்பற்றுவாள்.) சில நேரங்களில் தன் கண்ணீர் விட்டு அழும் வரைக்கும் கூட தன்னைத் தானே மிகக் கடுமையாக திட்டுவாள். அவளுக்கு நன்றாக நாபகம் இருக்கிறது. இப்படித்தான் ஒரு தடவை தன்னையே எதிராளியாக வைத்துக் கொண்டு விளையாடிய ஒரு விளையாட்டில் தன்னையே ஏமாற்ற முயற்சித்ததற்காக தன் காதலி தானே வலிக்கும்படி திருகினால். இந்த விநோதப் பெண்ணுக்கு தன்னை இரண்டு ஆளாகப் பாவித்துக்கொண்டு நடப்பது பிடித்திருந்தது. "ஆனால் அதனால் இப்போது ஒரு பயனும் இல்லை...!"என்று நினைத்தால்."இப்போது பொறுப்பான ஒரு பெண்ணாக இருப்பதே பெரிய வேலையாக இருக்கிறது...!"
விரைவிலேயே அவள் பார்வை அந்த மேசையின் கீழே இருந்த ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியின் மேல் விழுந்தது. அதை திறந்து பார்த்த போது அதனுள் ஒரு மிகச் சிறிய கேக் இருந்தது.

Friday, July 4, 2008

A LESSON FOR TEACHERS


My dear Gods!

Please make aware of these phrases
Release your students from traditional prisons!
They are not machines with switches
clay to be made as pot or spoiled.
Students are not your slaves.
Small men like you with human rights.
You live in your world.
They live in their world.
Please understand their innocent worlds.
Children are not cattle
to be handled with cane.
They have their own dreams
to be become true.
Don't repeat your history to your students
painful experiences with your teachers...!

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?