Saturday, October 25, 2008


கலக்கல் ஓவியங்களுக்கு நீங்கள் உடனடியாக நாடவேண்டிய இடம்...

http://brunotynbd.blogspot.com/

Tuesday, September 30, 2008

நாநீகள்...!

இறுகிய இதயங்கள் நொறுக்கும்
இளகிய இதயங்கள்...


பெரும் தொகைக்கு மகனை விற்று
சிறு தொகைக்கு மருமகன் வாங்கும்
வலி ஒலி நாமம் கொண்ட
முன்னாள் முதிர்கன்னிகள்...


போட்ட முதலுக்கு போணியாகாவிட்டால்
போட்ட தண்டச் சோற்றை வாந்திஎடுக்கச் சொல்லும்
முன்னாள் தண்டச் சோறுகள்...


'அடி'மைத்தனத்தை போதிக்கும்
பிழைக்கும் கலையை
பிழையில்லாமல் கற்றுத்தரும்
பிழைக்கத் தெரியாத
முன்னாள் எருமைமாடுகள்...


ஒரு துளி வியர்வை இல்லாமல்
ஒய்யாரமாய் சொர்கத்தில் இருந்து கொண்டு
பாலைவன உலகில் பச்சத்தண்ணி கூடத் தராமல்
தினமும் கூசாமல் ஆராதனைக் கப்பம் கேட்கும்
எம் முன் வரக் கூடத் தெம்பில்லாத
பயந்தாங்கொள்ளி ரவுடிகள்...


இவ்வார்த்தைகளின் வலியைக் கூட
புரிந்து கொள்ள முடியாமல்
கலாச்சாராய போதையில் மிதக்கும்
வயிற்றடிமைகள் நாநீங்கள்...


இந்த இறுகிய இதயங்கள் நொறுக்கும்
இளகிய இதயங்கள்...
உடைந்து போகும்
எதையுமே தாங்க இயலாத
'அப்பாவி' அப்பள இதயங்கள்....
அவையும் நாநீங்கள்...!

Tuesday, July 8, 2008

அதிசய உலகில் அலைஸ


Translation of ' ALICE IN WONDERLAND' -The great children novel written by Lewis Carroll

முயல் குழிக்கு கீழே...
அலைசிற்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு நேரம்தான் அந்த ஆற்றங்கரையோரமாக தன் சகோதரியின் பக்கத்தில் சும்மாவே அமர்ந்து கொண்டிருப்பது? அக்கா வசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கூட ஓரிரு தடவை எட்டிப் பார்த்து விட்டாள். அதில் ஏதும் படங்களோ அல்லது குறைந்தது உரையாடல்கள் கூட இல்லை. 'இதெல்லாம் ஒரு புத்தகமா? படங்களோ உரையாடல்களோ இல்லாமல்...?'அலைஸ் மனதிற்குள் அலுத்துக் கொண்டாள்.




அன்றைக்கு வெயில் வேறு கொளுத்திக் கொண்டிருந்ததினால் அவளுக்கு எல்லாவற்றிலும் எரிச்சலாகவே இருந்தது. தன்னருகில் நின்றிருந்த செடியில் பூத்திருந்த காட்டுப் பூக்களை பறித்து மாலை செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவாறு அதன் அருகில் சென்று மலர்களை பறிக்க ஆரம்பித்த போதுதான் திடீரென சிகப்பு கண்களுடன் வெள்ளை முயல் ஒன்று அவளருகில் ஓடுவதை கண்டாள்.
அடுத்து நடந்தது ஒரு அதிசயம்தான். ஆனால் அலைசிற்கு அது உறைக்கவே இல்லை. அது ஏதோ சாதாரண நிகழ்வு போலத்தான் அவளுக்குத் தோன்றியது. ஏனெனில் அந்த முயல் தனக்குள்ளே 'ஐயோ..ஐயோ...நான் பிந்தக்கூடாது...!'என்று சொல்லிக் கொண்டது அவளுக்கு கேட்டது. (அவள் இதைப் பற்றி பின்னால் யோசிக்கும் போது தான் அதற்காக அந்நேரம் ஏன் ஆச்சரியப் படவில்லை என்று வியந்திருக்கிறாள். ஏனெனில் அப்போது அதனை கேட்பது ஒரு இயற்கையான சம்பவம் போலத் தோன்றியது)


ஆனால் அந்த முயல் தன் சட்டையின் இடுப்பு பையிலிருந்து ஒரு கடிகாரத்தை எடுத்து பார்த்து விட்டு அவசர அவசரமாக பாய்ந்து ஓட ஆரம்பித்த போதுதான் அந்த சம்பவத்தின் வினோதம் அவளுக்கு சுரீரென உறைத்தது. 'இது எப்படி நடக்க முடியும்? ஒரு முயலாவது கடிகாரம் பார்ப்பதாவது...! ' மனது முழுதும் ஆச்சரியங்கள் வெள்ளமென பாய, அதனை பின் தொடர்ந்து அந்த வயலுக்குள் பாய்ந்து ஓடத் தொடங்கினாள். அதிஷ்டவசமாக அந்த முயல் ஒரு புதருக்குள் இருந்த ஒரு பெரிய முயல் குழிக்குள் பாயும் கடைசித் தருணத்தில் அதைக் கண்டுவிட்டாள்.


அவள் அதனை நெருங்கியபோது அது ஒரு பெரிய சுரங்க வழி போல உள் நோக்கி செல்வதைக் கண்டால். குனிந்து அதை பார்த்தவள் திடீரென அதற்குள் விழுந்துவிட்டாள். நேராக சென்ற அந்த சுரங்க வழி திடீரென சரிந்து ஒரு பெரிய கிணறு போன்ற ஒரு பள்ளமாகியது. அவள் நடக்கப் போவதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் மிக மிக மிக ஆழமான அந்தப் பள்ளத்திற்குள் விழத் தொடங்கினாள்.


அந்த பள்ளம் மிக மிக ஆழமாக இருந்ததாலோ அல்லது அவள் மிக மெதுவாக விழுந்து கொண்டிருந்ததாலோ என்னவோ விழுந்துகொண்டிருக்கும்போதே அவளால் தன்னை சுற்றி பார்க்கவும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்கவும் நன்றாகவே நேரம் இருந்தது.
முதலில் அவள் கிழே குனிந்து பார்த்து தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிய முயற்சித்தாள். ஆனால் கீழே மிகவும் இருட்டாக இருந்ததால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பின் அவள் அந்த கிணற்றின் இரு பக்கங்களையும் பார்த்தபோது அவற்றில் பல அலுமாரிகளும் புத்தகத் தட்டுகளும் இருப்பதைக் கண்டாள். ஆங்காங்கே சில வரைபடங்களும் படங்களும் தொங்குவதை அவதானித்தாள். அவள் தன்னருகில் வந்த ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்து பார்த்தாள். அதில் 'ஆரஞ்சு பழச்சாறு' என எழுதப் பட்டிருந்தது. ஆனால் அது வெறுமையாய் இருப்பதை பார்த்து பெரிதும் ஏமாற்றமடைந்தாள். ஆனால் அந்த குடுவையை கீழே போட அவள் விரும்பவில்லை. ஏனெனில் அது யார் மேலாவது அவர்கள் இறந்துவிடுவார்களோ என்று பயந்தாள். எனவே விழுந்து கொண்டிருக்கும்போதே அதனை இன்னொரு அலுமாரித் தட்டில் ஒருமாதிரியாக சமாளித்து வைத்து விட்டாள்.


இப்படி அவள் விழுந்து கொண்டிருக்கும் போது தன் வீட்டை நினைத்துக் கொண்டால். இனி நான் என் வீட்டுப் படிகளில் விழுந்தால் கூட பயப்படமாட்டேன். இனி என்னை வீட்டில் எவ்வளவு வீரமானவள் எனறு நினைப்பார்கள். ஏன் இனி வீட்டுக் கூரையிலிருந்து விழுந்தால் கூட நான் பயப் படமாட்டேன். ( அது உண்மை போலத்தான் தோன்றியது.)

கீழே...கீழே...கீழே....விழுந்துகொண்டே இருந்தாள். அவளது விழுகை ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. "இந்நேரத்திற்கு நான் எவ்வளவு கிலோமீற்றர்கள் விழுந்திருப்பேன்...?"அவள் வாய் விட்டு கேட்டுக் கொண்டாள். 'இப்போது நான் அனேகமாக பூமியின் நடுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருப்பேன் எனறு நினைக்கிறேன். சரி எண்ணிப் பார்ப்போம்...பூமியின் நடுப் பகுதி தரையிலிருந்து நாலாயிரம் மைல்கள் ஆழத்தில் இருக்கிறது. நான் நினைக்கிறேன்...( பாருங்கள்...அலைஸ் இந்த மாதிரி நிறைய விடயங்களை தன் பாடசாலைப் பாடங்களில் படித்திருக்கிறாள். ஆனால் தன் அறிவை சொல்லி பெருமையடித்துக் கொள்ள இது சரியான நேரமும் இல்லை. அத்துடன் சொன்னால் கேட்பதற்கு கூட அங்கு யாருமில்லை. இருந்தாலும் அதை கணித்து பார்த்துக் கொள்ளுவது அவளுக்கு நல்ல பயிற்சியாக இருந்தது. 'ஆமாம், அவ்வளவு தூரமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது அகலாங்கா... அல்லது நெட்டாங்கா என்று தெரியவில்லையே...! ( உண்மையில் அகலாங்கு, நெட்டாங்கு என்றாலே அவளுக்கு என்னவென்று தெரியாது. ஆனால் பெரியவர்கள் போல அதனை சொல்லிக்கொள்ள விரும்பினாள். )


இப்போது அவள் மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள். 'நான் அப்படியே பூமியின் நடுப்பகுதியால் துளைத்துக் கொண்டு சென்று அதன் மறு பக்கத்திற்கு போகப் போகிறேன் என்று நினைக்கிறேன். அங்கே தலை கீழாக நடந்து கொண்டிருக்கிற மக்களுக்கு நடுவில் நான் தலை கீழாக போய் நிற்பேன்! எவ்வளவு வேடிக்கையாய் இருக்கும்! ஆனால் 'மாண்புமிகு' கடவுளே...!(இப்போது யாரும் பக்கத்தில் இல்லாதது நல்லதாகப் போய்விட்டது. அது சரியான சொல்தானா என்று தெரியவில்லை!) அங்கே போனவுடன் அங்கே இருக்கும் மக்களிடம் அது என்ன நாடு என்று கேட்க வேண்டும். 'அம்மா...தயவு செய்து இது என்ன நாடு என்று சொல்வீர்களா?' அவள் ஆலயத்தில் முழந்தாளிட்டு மன்றாடுவது போல அப்போதும் முழந்தாளிட முயற்சித்தாள். அந்தரத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது முழங்தாள்படியிடுவதை கற்பனை பண்ணிப் பாருங்கள். உங்களால் செய்ய முடியுமா? ) ஆனால் அப்படிக் கேட்டால் என்னை ஒரு லூசுப் பெண் என்றுதான் நினைப்பார்கள்.யாரிடமும் கேட்கக் கூடாது. எங்காவது அதை எழுதியிருப்பார்கள். அங்கே வாசித்துக் கொள்ளலாம்.


கீழே...கீழே...கீழே...போய்கொண்டேயிருந்தாள். அவளுக்கு செய்வதற்கும் ஒன்றுமில்லை. எனவே மீண்டும் தனக்குத்தானே பேச ஆரம்பித்தாள். 'தினா இன்றிரவு நான் இல்லாமல் மிகவும் கஷ்டப் படபோகிறாள். ( தினா அவளது பூனை.) இன்றைக்கு தேநீர் வேளையில் அவர்கள் அதற்கு பால் கொடுக்க மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ, என் செல்லகுட்டி தினா! நீயும் என்னுடன் விழுந்திருக்கலாம்! ஆனால் இங்கே இந்த அந்தரத்தில் ஒரு எலியும் இல்லையே...ஆனால் நீ வெளவால்களை பிடித்து சாப்பிடலாம்! அவையும் கிட்டத்தட்ட எல்லிகளைப் போலத்தான் இருக்கின்றன. ஆனால் பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா? தெரியவில்லையே...! இப்போது அவளுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. தூக்கக் கலக்கத்தில் உளற ஆரம்பித்தாள். 'பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா?...பூனைகள் வெளவால்களை சாப்பிடுமா?...' சில நேரங்களில் 'வெளவால்கள் பூனைகளை சாப்பிடுமா?' உண்மையில் எப்படி மாற்றிக் கேட்டாலும் அந்த இரண்டு கேள்விகளுக்குமே விடை அவளுக்கு தெரியவில்லை. இப்போது அவள் ஒரு அரைகுறைத் தூக்கத்தில் ஒரு அரைகுறை கனவு காண ஆரம்பித்தாள். அவள் தன் தினாவின் கையை பற்றியவாறு நடந்து கொண்டே அதனை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கிறாள். ' தினா, உண்மையை சொல்லு. நீ எப்போதாவது வெளவால் சாப்பிட்டிருக்கிறாயா?' ஆ..!தொம்ப் ..தொம்ப்..அவள் காய்ந்த சருகுகள்,குச்சிகள் கிடந்த ஒரு குவியலில் விழுந்திருந்தாள். அப்பாடி, ஒரு வழியாக அவளது விழுகை முடிந்துவிட்டது.
அலைசிற்கு சின்னக் காயம் கூட ஏற்படவில்லை. விழுந்த அடுத்த கணமே துள்ளி எழும்பிவிட்டாள். மேலே பார்த்தாள். ஆனால் மேலே முழு இருட்டாக இருந்தது. இப்போது அவளுக்கு முன்னால் இன்னொரு சுரங்கப் பாதை இருந்தது. அந்த வெள்ளை முயல் அந்தப் பாதையால் ஓடுவதைக் கண்டாள். இனி ஒரு கணமும் தாமதிக்க முடியாதென உணர்ந்தாள். காற்றுப் போல பாய்ந்து அதன் பின்னால் ஓடினாள். அது ஒரு வளைவில் திரும்பும் போது அது தனக்குள் ' ஐயோ...எவ்வளவு பிந்திவிட்டது...!'என்று சொல்லிக் கொள்வது அவளுக்கு கேட்டது. ஆனால் அந்த வளைவில் அவள் திரும்பி பார்த்த போது அதைக் காணவில்லை. ஆனால் அவள் முன்னால் நீளமான ஒடுக்கமான வராண்டா ஒன்று விரிந்திருந்தது.




அந்த வராண்டாவின் இரு பக்கங்களிலும் நிறைய கதவுகள் காணப்பட்டன. ஆனால் அவை எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. அலைஸ் அந்தப் பள்ளமாய் சரிந்து சென்ற அந்த வராண்டாவின் எல்ல்லாக் கதுவுகளையும் போகும்போது தள்ளி தள்ளிப் பார்த்துக் கொண்டே சென்றாள். எந்த ஒரு கதவும் திறக்காமல் போகவே, சோர்ந்து போய் அப்பாதையின் நடுப் பகுதியால் நடக்க ஆரம்பித்தாள். இதை விட்டு எப்படி வெளியேறப் போகிறேன்?
திடீரென தன் பாதையின் முன்னால் ஒரு மூன்று கால் மேசை இருப்பதை கண்டாள். அது முழுவதும் உறுதியான கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரே ஒரு சிறிய தங்கத் திறப்பு மட்டும் வைக்கப்பட்டிருந்தது. இந்த திறப்பு நிச்சயமாக அந்த வராண்டவிலுள்ள ஏதாவது ஒரு கதவின் திறப்பாகத்தான் இருக்கும் என்று அவள் முதலில் நினைத்தால். ஆனால் ஐயோ பாவம்! ஒன்று பூட்டு மிக பெரிதாக இருந்தது அல்லது திறப்பு மிக சிறிதாக இருந்தது. ஒரு கதவும் திறக்கவில்லை.ஆனால் அவள் அதை இரண்டாவது தடவை சுற்றி வந்த போது திரைச்சீலை ஒன்றைக் கண்டாள். முன்பு அதை அவள் கவனிக்கவில்லை. அதன் பின்னால் ஒரு பதினைந்து இன்ச் உயரமான கதவு இருந்தது. அதில் அந்த தங்கத் திறப்பை நுழைத்து பார்த்தால். என்ன ஆச்சரியம்...அது திறந்து விட்டது!
அலைஸ் அக்கதவை திறந்து பார்த்தாள். அதன் உள்ளே இன்னொரு சிறிய பாதை ஒன்று ஆரம்பித்திருந்தது. அது ஒரு எலி பொந்தை விட மிக சிறிதாகத்தான் இருந்தது. அவள் குனிந்து அந்தப் வழியால் பார்த்தபோது அதன் முடிவில் மிக மிக அழகான தோட்டம் ஒன்று இருப்பதைக் கண்டாள். அதன் அபார அழகில் அவள் மயங்கிப் போனாள். அவள் எவ்வளவிற்கு அந்த இருட்டரையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஏங்கினாளோ அதை விட அந்தத் தோட்டத்திற்குள் போகவேண்டும் எனவும் அதன் மலர்ப் படுக்கைகளை தொட்டு பார்க்கவும் ஏங்கினாள். அனால் அவளால் தன் தலையைக் கூட அதனுடாக நுழைக்க முடியவில்லை. ஐயோ...நான் இந்தத் தோள்கள் இல்லாமல் பிறந்திருக்கலாம்... அல்லது இந்தக் கண்களுக்கு தொலைநோக்கி போல தூரத்தில் இருப்பவற்றை தெளிவாகப் பார்க்கும் சக்தி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...! ஆனால் பொறு, எதற்கும் ஒரு வழி இல்லாமல் போகாது. எதற்கும் ஒரு ஆரம்பம் என்று ஒன்று இருக்கும். அந்த ஆரம்பத்தை கண்டு பிடித்தால் போதும்...அவள் நினைத்தது சரிதான். எந்தவொரு பிரச்சனையின் முதல் முடிச்சை அவிழ்த்தால் போதும். மீதி தானாகவே அவிழ்ந்துவிடும். அதனால் எந்த சாத்தியப்படாத சாதனையையும் சாத்தியமாக்கிவிடலாம்.




அந்த சிறு கதவுக்கு பக்கத்தில் அப்படியே நிற்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. அவள் மறுபடியும் அம்மேசையை நோக்கிச் சென்றாள். வேறு ஒரு திராப்பு அல்லது இப்படி மூடிய கதவிற்குள் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்ற, எப்படி வெளியேற வேண்டும் என விளக்குகின்ற புத்தகம்போன்று ஏதாவது கிடைக்காதா என்ற அறை நம்பிக்கையுடன்தான் சென்றால். இந்தத் தடவை அங்கெ ஒரு சிறிய போத்தல் இருந்தது. (நிச்சயமாக முன்பு அது அங்கெ இருக்கவில்லை என்று அவள் சொல்லிக் கொண்டால்) அப்போத்தலின் கழுத்தை சுற்றி ஒரு பேப்பர் சுற்றியிருந்தது. அதில் மிக அழகாக பெரிய எழுத்துகளில் 'என்னைக் குடி' என்று எழுதப்பட்டிருந்தது.
அது சரி. என்னைக் குடி என்று அது இலகுவாக சொல்லிவிடலாம். அதற்காக உடனே ஏமாந்து பொய் நமது குட்டிப் புத்திசாலி பெண் அதைக் குடித்துவிட மாட்டாள். ம்கூம்...நான் இது நஞ்சா இல்லையா என பரிசோதிக்கவேண்டும்...அப்படி ஏதும் எழுதப்பட்டிருக்கிறதா என பார்த்தால். இப்படி எத்ததனை கதைகள் அவள் வாசித்திருப்பாள். இந்த மாதிரியான நேரங்களில் அவசரப்பட்டு ஏதாவது செய்தால் பூதங்கள் போன்ற ஏதாவது மறைந்திருப்பவை வெளியே வந்து என்னைக் கடித்து சாப்பிட்டு விடும். அதிலும் இது நஞ்சாக இருந்தால் நான் அதோ கதிதான்.
ஆனால் அதில் எந்த இடத்திலும் நஞ்சு என்று எழுதப்பட்டிருக்கவில்லை. எனவே அலைஸ் அதனை சற்று சுவைத்துப் பார்த்தால். அப்பா..அது மிக மிக சுவையாய் இருந்தது. அது ஆப்பிள் ஆரஞ்சு அன்னாசி வாழைப்பழம் என பலவகையான பழங்களின் சாறு கலந்தது போன்ற சுவையாய் இருந்தது. அவள் அதை ஆவலுடன் மட மடவென உறிஞ்சிக் குடித்துவிட்டாள்.
.............................
................................
....................................!
' என்ன ஒரு வினோதமான உணர்வு...!' என்று சொல்லிக்கொண்டாள். நான் இப்போது ஒரு தொலைநோக்கி கருவி அளவு சிறியவளாய் இருந்தால் எப்படி இருந்திருக்கும்?'
உண்மையில் அதுதான் நடந்தது. அவள் அப்படி நினைத்த மறுகணமே அவளது உருவம் மிகச் சிறியதாக மாறியது. அவள் இப்போது வெறும் பத்து இன்ச் உயரமே இருந்தாள். அந்த அழகான தோட்டத்திற்குள் நுழைவதற்கு இருக்கும் கதவிற்கு அளவாக தன் உயரம் மாறிவிட்டதை கண்டதும் சந்தோசத்தில் அவள் முகம் பிரகாசமாகியது. எனினும் இதில் ஏதும் ஆபத்து மறைந்திருக்குமொஎன்று சில நிமிடங்கள் யோசித்தால். இதனால் அவள் சற்று மனமும் தளர்ந்தால். 'இது கடைசியில் எப்படி முடியுமோ?' தனக்குள் கேட்டுக் கொண்டால். ' இந்த உருவத்துடநேயே நான் இந்த இடத்தை விட்டு வெளியேறினால் இதற்கு பிறகு எனக்கு என்னவாகும்? ஒரு மெழுகுதிரி போலத்தான் ஆகிவிடுவேன்!'ஒரு மெழுகுதிரி முழுவதுமாக எரிந்து முடிந்தவுடன் அது எந்த உருவத்தில் இருக்கும்?என்று அவள் யோசித்தால். அப்படி ஒரு உருவத்தை அவள் பார்த்ததாகவே ஞாபகமில்லை.
சற்று நேரம் கழிந்தும் தனக்கு எதுவும் இன்னும் ஆகவில்லை என்று கண்டவுடன் உடனடியாக அந்தத் தோட்டத்திற்குள் நுழையத் தீர்மானித்தால். ஆனால் பாவம் அலைஸ்! கதவை நெருங்கியபோதுதான் தான் அந்தத் தங்கக் திறப்பை எடுக்காமல் மறந்து பொய் வந்திருப்பதை உணர்ந்தால். ஆனால் அவள் அதை எடுப்பதற்காக மேசைக்கு சென்றபோது அந்த திறப்பு எட்ட முடியாத உயரத்திலிருப்பதைக் கண்டால். அந்த கண்ணாடி மேசையில் திறப்பு இருப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் நிறைய கடினப்பட்டு மேசைக்கால்களில் ஒன்றில் ஏற முயற்சித்தால்.ஆனால் அது மிகவும் வழுக்கியது. மறுபடி மறுபடி அதில் ஏற முயற்சித்து ஒரு கட்டத்தில் மிகவும் களைத்துப் பொய் பாவம் கிலே அமர்ந்து அழ ஆரம்பித்தால்.


"சரி,சரி...இப்படி உட்கார்ந்து அழுவதால் ஒன்றும் நீ சாதித்துவிடப் போவதில்லை...!" அலைஸ் தனக்குத்தானே அதட்டினால். "முதலில் நீ இந்த நிமிடத்தை மறந்து விடு. இதுதான் நான் உனக்கு சொல்லும் ஒரே அறிவுரை...!"அவள் பொதுவாகவே தனக்குத் தானே அறிவுரை குறிக் கொள்ளுவாள். . (ஆனால் எப்போதாவதுதான் அதை பின்பற்றுவாள்.) சில நேரங்களில் தன் கண்ணீர் விட்டு அழும் வரைக்கும் கூட தன்னைத் தானே மிகக் கடுமையாக திட்டுவாள். அவளுக்கு நன்றாக நாபகம் இருக்கிறது. இப்படித்தான் ஒரு தடவை தன்னையே எதிராளியாக வைத்துக் கொண்டு விளையாடிய ஒரு விளையாட்டில் தன்னையே ஏமாற்ற முயற்சித்ததற்காக தன் காதலி தானே வலிக்கும்படி திருகினால். இந்த விநோதப் பெண்ணுக்கு தன்னை இரண்டு ஆளாகப் பாவித்துக்கொண்டு நடப்பது பிடித்திருந்தது. "ஆனால் அதனால் இப்போது ஒரு பயனும் இல்லை...!"என்று நினைத்தால்."இப்போது பொறுப்பான ஒரு பெண்ணாக இருப்பதே பெரிய வேலையாக இருக்கிறது...!"
விரைவிலேயே அவள் பார்வை அந்த மேசையின் கீழே இருந்த ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டியின் மேல் விழுந்தது. அதை திறந்து பார்த்த போது அதனுள் ஒரு மிகச் சிறிய கேக் இருந்தது.

Friday, July 4, 2008

A LESSON FOR TEACHERS


My dear Gods!

Please make aware of these phrases
Release your students from traditional prisons!
They are not machines with switches
clay to be made as pot or spoiled.
Students are not your slaves.
Small men like you with human rights.
You live in your world.
They live in their world.
Please understand their innocent worlds.
Children are not cattle
to be handled with cane.
They have their own dreams
to be become true.
Don't repeat your history to your students
painful experiences with your teachers...!

Sunday, June 29, 2008

I LIKE DARKNESS!


Darkness is a perfect filler of any vacuum not light!
It captures the earth under its rule every half day equally to the sun.
It does not give up its trying on day time too.
It hides itself as shade behind animate and inanimate objects!
If the sun attempts to eliminate it,
it can not achieve it completely.
If men run too, it will follow them as a spy
till its winning time comes.
People also like to rest under the shadow of darkness
to escape from the light man.
Nobody can destroy it at night. Let's light a lamp.
It would be under the lamp too!
Look at moon, the friend of darkness.
It has darkness one side fully and also
has some darkness on facing side to the earth.
So, it is a dark moon not bright!
Darkness of night gives resting period to tired people.
If there is no darkness,
nobody would have known existence of light and
there is no value to light.
There is no imaginative power on day world, but
numerous new dreaming worlds are born in darkness.
We are born from darkness of our mother's womb.
We are going to stay permanently in darkness of tomb.
Above all, after thousands and thousands years,
there will be no sun, but darkness will last forever...
So, I do the heading!

MY BELOVED ENEMY


Who are you? Why do you oppose me?
I couldn't know clearly you.
your body has been twisted round
By a boa of religiousness,
Throw it!
Your legs have been bound
with a chain of racism,
Remove it!
Your face too has been hidden
by a cap of traditionalism,
Take off it!
Your hands have been bound
By a rope of patriotism,
Leave it!
Aha! You also have one lovable heart
And a hunger stomach!
So, you are are a man like me! Then,
Why are you against me? come with me!
Let's create a new world!

Saturday, June 28, 2008

THE WAVES OF MEMORIES

My memories about you

Give pleasure


And pain too!


I decide to forget you


Definitely and


Daily!

FACE

We face various situations by our face!
Our face makes different faces of others.
Smile face creates peaceful and happymood.
Sad face produces sorrowful and regretful mind.
Attractive face gains all goals.
Ugly face loses his friends and foes too!
Face is the mirrror of our emotions.
Face determines our future.
Face of child gives more hopes to live.
Face of god was made to give hopes after death!

LOVE

Love is a selfishness,
when it is used to use others for our needs
Love is a patriotism,

when it is used to fight for the nation.
Love is a devotion,
when it is used to worship god.
Love is a trade,
when it is used to gain more advantage.
Love is an agreement,
when it is used to found a marriage.
Love is love, only
when it is used to love others...!

GOD! WHERE ARE YOU?


Why do you fear to face our faces?
why do you prefer to stay far away us?
Don't you like the world, created by you?
don't you love us, produced by you?
why did you create the good with the bad?
why did you make angels with devils?
didn't you familiar our strength with our weakness?
didn't you understand our body with a stomach?
why will you visit again to our world?
why will you punish us according to your law?
won't you know that our world is not like yours?
won't you learn that our sins are yours?

ENJOY YOUR LIFE


Without your permission
a life has been given you!
without your knowledge
it is going to fly away!
you don't know
where you came from and
where you are going!
you are hungry, eat well!
whatever your hunger is !
you face some situations
handle them happily!
whatever situation is
don't listen to foolish rules!
do what you like
If it is not harmful to others!
who are you? basically a man,
a part of animal kingdom!

என்னை விடவும்

என்னை விடவும் இந்த உலகத்தில்
எவனும் உயர்ந்தவன் எவனும் இல்லை...
உங்களை விடவும்தான்...!

மற்றவர்கள்

மற்றவர்கள் தங்கள் பிழைகளை ஏற்றுகொள்ள வைப்பதற்கான ஒரே சிறந்த வழி...நம் பிழைகளை நாம் ஏற்றுக் கொள்ளுவதுதான்...!

நாங்கள் நேர்மையானவர்களா....?

நாங்கள் நேர்மையானவர்கள் இல்லை....!
அதனால் நம் கடவுளும் நேர்மையானவர் இல்லை ...!


ஏனெனில் ...


தாயைப் போல பிள்ளை ,
கடவுளை போல மனிதன்...!

Tuesday, June 24, 2008

நீங்கள் நல்லவரா?

சத்தியமாக ஆம் என்பீர்கள். ஆனால் நீங்கள் நல்லவர்தானா என்று உங்களுக்குத் தெரிந்த எவரிடம் கேட்டாலும் ஆம் என்று சட்டென ஒப்புக்கொள்ள தயங்குகிறார்களே...அது ஏன்? அவ்வளவு ஏன்...உங்கள் அடிமனதில் உங்களுக்கே அதில் சந்தேகம் இருக்கிறதே... அப்படிஎன்றால் நீங்கள் உண்மையிலேயே நல்லவரா...கெட்டவரா...? உடனே 'நாயகன்' கமலக்ன் மாதிரி "தெரியலியே...!" எம்று இழுக்காதீர்கள்.
சரி, இந்த உலகத்தில் வேறு யாராவது நல்லவர்கள் இருக்கிறார்களா? (உங்களை தவிர! ) பொதுவாகவே நாம் நம்மைத்தவிர மற்றவர்களை நல்லவர்கள் என்று ஒப்புக் கொள்ள தயக்கம் காட்டுகிறோம். நாம் நல்லவர்கள் என்று ஒப்புக் கொள்ளும் நபர்கள் சிலரை எண்ணிப் பாருங்கள். மகாத்மா காந்தி, புத்தர், இயேசு... ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட நல்லவர்களிடம் ஒரு நாளும் உங்களுக்கு நேரடியான பழக்கம் இருந்திருக்காது. புராணக் கதைகளில், பத்திரிகைகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.உடனே " அது சரி...அவர்களெல்லாம் மகான்கள்...மகான்கள், மகாத்மாக்கள் இருந்ததெல்லாம் அந்தக் காலம்...இந்தக் காலத்தில் எல்லோரும் கள்ளன்கள்...மற்றவர்களை எப்படி ஏமாற்றி பிழைக்கலாம் என்று திரிகிறார்கள்..." என்பீர்கள். ஆனால் உங்களுக்கு மேற்படி மகான்களிடம் பழக வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்களிடமும் ஏதாவது பிழை கண்டு பிடித்திருப்பீர்கள்! அதுதான் உண்மை!
சரி குழம்ப வேண்டாம், உண்மையில் யார் நல்லவன்? யார் கெட்டவன்? நல்லவன் என்று ஒருவனுமில்லை. கெட்டவன் என்றும் ஒருவனுமில்லை. இந்த ஹீரோ , வில்லன் என்பதெல்லாம் கதை சுவாரசியத்திற்காக படைக்கப்பட்டவை. உண்மையில் ஒவ்வொரு மனிதனிலும் ஒரு ஹீரோவும் ஒரு வில்லனும் மறைந்து இருக்கிறார்கள்...ஆம்...கசப்பாய் இருந்தாலும் அதுதான் உண்மை...!

Saturday, June 21, 2008

ஏதாவது எழுத...

ஏதாவது எழுத வேண்டுமென ஆசைப்படுகிறேன். ஒன்றும் முடியவில்லை. முன்பெல்லாம் நிறைய கற்பனைகள், கதைகள், கவிதைகள் என்று மனதில் குவியும். சிலதை எழுத்திலும் எழுதிவிடுவேன். ஆனால் வெளியிடுவதற்கு எவனும் தயாராய் இருக்க மாட்டான். ஆனால் இப்போது எவ்வளவு எழுதிக் குவித்தாலும் எப்போது கொடுத்தாலும் ஏன் 'என்ன' கொடுத்தாலும் (!) வெளியிடுவதற்கு தயாராய் இருக்கும் ஒருவன் கிடைத்தும் எழுத முடியவில்லை. ஏதாவது எழுத நினைத்தால் அதையெல்லாம் யாரோ முன்பே எழுதி விட்டது போல தோன்றும். அல்லது நான் எழுத நினைக்கும் கருத்துக்கு எதிராகவே எனக்குள்ளேயே பல கருத்துகள் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன எழுதி கிழித்து விடப் போகிறாய்...அல்லது என்ன புதுமையான விஷயத்தை நீ சொல்லப் போகிறாய் என விரல் நீட்டுகின்றன.


சில நேரங்களில் அதிகம் படித்தால் மூளை குழம்பி விடும் என்பார்கள். அதே போல அதிகம் வாசித்தால் எந்தக் கருத்து சரி எது பிழை என்பது புரியாமல்
போய்விடுமோ? உதாரணமாக கடவுள் இல்லை என்று எழுத ஆசைப்படுகின்றேன். ஆனால் ஏதோ ஒன்று பின்னால் நின்று கையை இழுத்து தடுக்கிறது. என்ன அது? சின்ன வயதிலிருந்தே எனக்குள் வளர்த்து விடப்பட்டிருக்கும் கடவுள் பயமா? அல்லது எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை எதிர்ப்பதற்கு தயக்கமா? வட்டத்திலிருந்து வெளியே வந்தால் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற பயமா?அல்லது உண்மையிலேயே என் கருத்தில் எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்பதாலா? அல்லது...அல்லது...அந்தக் கடவுளே தடுக்கிறாரோ...?!


ஐயோ...குழப்பம்...குழப்பம்...மஹா குழப்பம்...ஆனால் ஒன்று ...எவருமே தாங்கள் அடித்துச் சொல்லும் கருத்தில் ஒரு பத்து வீதமாவது அடிமனதில் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இக்கருத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...!

கடவுள் இருக்கிறாரா ...இல்லையா...? உலகத்திலேயே மிகப் பழமையான வாதப் பிரதிவாதம் இதுவாகத்தான் இருந்திருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றை அடித்துச் சொல்ல என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் மிகச் சத்தியமாக அடித்துச் சொல்கிறேன். அப்படி ஒருவர் இருந்தால் முதன் முதலில் நரகத்தில் தள்ளப்பட வேண்டிய நபர் அவர்தான் ! எனக்கு கடவுளை பிடிக்காது. எங்களை நல்லவனாக இரு இரு என்று சொல்லிக்கொண்டே இருக்கிற தவறெல்லாம் அவர்தான் செய்திருக்கிறார், செய்து கொண்டு இருக்கிறார். உங்களிடம் எனக்கென்ன பேச்சு...? நான் கடவுளிடமே நேரடியாக கேட்டு விடுகிறேன் . கடவுளே...உண்மையிலேயே நீர் இருந்தால் இந்த எழுத்தெல்லாம் உம் முன் வாசிக்கப்படும் தானே...என் கேள்விகளுக்கு பதில் சொல்லும்... நீர் தெரிந்தோ தெரியாமலோ கடவுளாகி விட்டீர். அல்லது கடவுளாகவே இருக்கிறீர். இந்த அளவில்லாத சக்தி எப்படி உமக்கு கிடைத்தது ...எங்கிருந்து கிடைத்தது. ...உமக்கு எப்படி ஆதியும் அந்தமும் இல்லாமற் போகும்...என்பது போன்ற உமது சொந்த விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் எங்கள் உலகத்தை நீர்தான் படைத்தீராம்...அதை ஆள்கிறீராம்...நிறைய விதிகள் கட்டுபாடுகள் எல்லாம் விதிக்கிறீராம்...கடைசியில் நீதிமன்றம் எல்லாம் வைத்து எங்களுக்கு தண்டனை வேறு கொடுக்கப் போகிறீராம். இப்படியெல்லாம் எங்கள் சொந்த விசயத்தில் நீர் தலையிடுவதால் உம்மிடம் நாக்குத் தெறிக்க ( என் நாக்கு தெறித்தாலும் பரவாயில்லை) நாலுகேள்வி கேட்கிறேன்... பதில் சொல்லும்...

உடனடி மகிழ்ச்சிக்கு...

ஹாய் ஹவ் ஆ யூ ? ஐ ஆம் இன் ஹப்பி மூட் நவ்...மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நம்புவீர்களா...? இதை எழுதுவதற்கு வந்து உட்கார சற்று முன்பு கூட நான் அவ்வளவு சந்தோஷ மூடில் இருக்கவில்லை. பின் இது எப்படி சாத்தியமானது? இசை...!இசை...!இசை...!ஹெட் போனுடாக என் காதினுள் பாய்ந்து கொண்டிருப்பது... 'பொல்லாதவன்' படத்தின் பொல்லாத ரி மிக்ஸ் 'எங்கேயும் எப்போதும்...' இசை வெள்ளம்... ஆகா... இந்த இசை தான் எப்படி ஒரே வினாடியில் நமது மனநிலையை மாற்றிப்போட்டு விடுகிறது...!
உடனடியாய் இசையை பற்றி ஒரு கவிதை வடிக்காவிட்டால் அதனால் இன்பம் பெற்றுவிட்டு அதனை ஏமாற்றிய ஒரு துரோகியாகிவிடுவேன்...இதோ... இதோ...
இசை...

Friday, June 13, 2008

எனது பெயர் ராம்...

எனது பெயர் ராம். நான் ஒரு சாதாரணமான சிறுவன். ஆனால் என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் என்னை அசாதாரணமானவனாக மாற்றிவிட்டன. நிச்சயம் நீங்கள் அவற்றை எந்தக் கோவிலில் வைத்து சத்தியம் பண்ணினாலும் நம்பப்போவதில்லை. சரி பரவாயில்லை. நீங்கள் அவற்றை கற்பனை என்றே நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் என்னை நம்புகிறீர்களோ இல்லையோ நான் அவற்றை யாரிடமாவது சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும்.


என்ன வாழ்விலேயே மறக்க முடியாத அந்த நாள் வெகு வெகு சாதாரணமாகத்தான் பிறந்தது. முதல் நாளிரவு கணித ஆசிரியர் தந்த தலை சுற்ற வைக்கும் கணக்குகளை செய்து முடிக்க அதிகாலை இரண்டு மணியாகிவிட்டது. அதனால் விடிய எழும்ப பிந்திவிட்டது. பாலைவனத்தில் கடுன் தாகத்துடன் திக்குத் தெரியாமல் அலைவது போல கனவு கண்டுகொண்டிருந்த என் மேல் திடீரென நீர் வீழ்ச்சி பாய்ந்தது. ஆஹா...என்று கண் விழித்தால் எதிரில் ஹாஸ்டல் வார்டன் கையில் தண்ணி வாளியுடனும் முகத்தில் எரிமலை குழம்பு வழியவும் நின்றார். அவரிடம் 'குட்' மோர்னிங்காக காது முறுக்கலை வாங்கிக்கொண்டு பதறியடித்துக் கொண்டு ஸ்கூலுக்கு ஓடினால் வாசலில் காத்திருந்து பிரம்புப் பரிசளித்தார் ரவி சேர். பின்பக்கத்தை தடவிக்கொண்டு வகுப்புக்கு ஓடினேன்.

இதெல்லாம் வழமையான நாளாந்த நடவடிக்கைகள்தான். அவற்றை விடுங்கள். ஆனால் அன்று ஏன் சயன்ஸ் சேர் அந்த பாடத்தை படிப்பித்தார், ஏன் அன்று மட்டும் அந்த சப்ஜெக்டில் அவ்வளவு டவுட் வர வேண்டும்? எங்கேயோ எதிலேயோ ஒரு மர்மமான தொடர்பு இருந்துதான் இருக்க வேண்டும் . அது மட்டும் நிச்சயம். இந்த அண்டவெளியினில் நாம் மட்டும் தான் இருக்கிறோமாம். நம்மைத்தவிர எவருமே இல்லையாம். வழமையாக சேர் எது சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் எனக்கு இதை மட்டும் முடியவில்லை. எப்படி நாம் அதை அவ்வளவு உறுதியாக சொல்லலாம் ? நமது கண்ணுக்கு புலப்படாமல் இருக்கலாமல்லவா?


நான் இதை சேரிடம் சொன்னபோது அவர் எனக்கு சொன்ன விளக்கம் திருப்தியளிக்கவில்லை. மறுபடி மறுபடி நான் என் கருத்தை வலியுறுத்த மடியாமல் போன சேர் என்ன

Friday, June 6, 2008

சுஜாதா எனும் வசியம்


ஹலோ, எப்படி இருக்கிறீங்க? கொஞ்ச நாளா எனக்கு மூட் அவுட்டுங்க...என் அபிமான எழுத்தாளர் சுஜாதா மறைந்துவிட்டார். சுஜாதாவின் பெருமைகளை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. சுஜாதாவின் சாதனைகளை அவர் இறந்த பிறகு பத்திரிகைகள் பட்டியலிடுகின்றன. தெரியாதவர்கள் அவற்றை வாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் அவரின்
எழுத்தாற்றலை கண்டு வியக்க வேண்டும் என்றால் நீங்கள் அவரின் ஆக்கங்களை வாசித்தால்தான் முடியும். ஆனால் சுஜாதாவிற்கும் எனக்கும் இடையிலான இருந்த ஒரு உறவைத்தான் இங்கு சொல்ல விரும்புகிறேன். அது துரோணருக்கும் ஏககலைவனுக்கும் இடையில் இருந்த உறவு.


பொதுவாக இளமை பருவத்தில் இருப்பவர்கள் எதிர்ப்பாலை கனவில் காண்பார்கள். ஆனால் நான் நிறையத்தடவை சுஜாதாவைத்தான் கண்டிருக்கிறேன். அவ்வளவிற்கு அவர் என்னில் பாதிப்பு செலுத்தியிருக்கிறார்.
நான் வாழ்க்கையில் ஒரு தடவையாவது நேரில் சந்திக்க ஆசைப்பட்ட ஒரே எழுத்தாளர் அவர்தான். எங்காவது "சுஜாதா" என்கின்ற எழுத்துக்களை கண்டாலே அவற்றை விழுந்து விழுந்து படிக்குமளவு பைத்தியமாக இருந்தேன்.

Saturday, April 19, 2008

நிலா

கவிஞர்களின் பரம்பரை சொத்து.
கதை சொல்லும் பாட்டிகளின்
கற்பனை சொர்க்கம்.
வளர்ந்தும் தேய்ந்தும்
வாழ்வியலை கற்பிக்கும் ஆசான்.
பின் பக்கம் முழுதும் இருளும்
முன்பக்கம் சிறு சிறு இருட்டுகளும்
கொண்டிருந்தாலும் அதை மறைத்து
வெள்ளை நிலா என பெயரெடுத்த
கள்ள நிலா அது.
பலகோடி நட்சத்திர வைரங்களுடன்
பயமில்லாமல் பவனி வரும்
இரவின் ராணி அவள்.
இவளுக்குப் பயந்து ஆதவன் கூட
இரவில் வருவதில்லை...

Monday, April 14, 2008

உன் உயர்வை யாராலுமே தடுக்க முடியாது...உன்னைத்தவிர...!


உங்கள் சிந்தனைக்கு...!


உங்கள் நண்பன் உங்கள் எதிரியால் கொல்லப்படும்போது கவனமாக இருங்கள். அதற்காக நீங்கள் உங்கள் எதிரியை கொல்லும்போது நீங்களும் யாரோ ஒருவனின் நண்பனைத்தான் கொல்கிறீர்கள்....!

Saturday, April 12, 2008

பெண்கள்


பெண்கள்


யப்பா..! இவர்களைப் பத்தி பேசிப் பேசியே மாய்கிறார்கள்! அப்படி என்னதான் ஸ்பெஷல் இவர்களிடம் இருக்கிறது அப்படிப் பேசுவதற்கு? பெண் விடுதலை என்கிறார்கள். ஆணாதிக்கம் என்கிறார்கள். அடிப்படையில் அவை என்னவென்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் காவியங்களிலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்; ஒடுக்கப்பட்டாள் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் போட்டு முழங்கும் 'அறிவுஜீவிகள்' சற்று கவனமாக கோபப்படாமல் முக்கியமாக பதட்டப்படாமல் தொடர்ந்து வாசிக்கவும். ஏனென்றால் நானும் ஒரு பெண்ணிடமிருந்து பிறந்தவன்தான். தயவு செய்து தொடர்ந்து வரும் வசனங்களை ஆணாதிக்க வெறி பிடித்த ஒரு ஆடவன் எழுதுகிறான்; இவன் சொல்வதற்க்கெல்லாம் எப்படி எதிர்வாதங்கள் வைக்கலாம் என யோசித்துக்கொண்டே வாசிக்காதீர்கள். உங்கள் அப்பா (அதாவது உலகிலேயே உங்களுக்குப் பிடித்த ஆணாதிக்க வெறி இல்லாத ஒரே ஒரு நபர்) சொல்கிறார் என நினைத்துக்கொண்டு தொடருங்கள்.


உலகத்தில் பெண்கள் துன்பபடுகிறார்கள். ஏற்றுக் கொள்கிறேன். அப்படியென்றால் ஆண்கள்? சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்களா?இல்லைத்தானே? அப்படியிருக்க ஏன் பெண்கள் மட்டும் தாங்கள் துன்பப் படுவதை தூக்கிப் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்? சரி, ஆண்களால்தான் பெண்களுக்கு நிறையத் துன்பம் என்று சொல்லப் போகிறீர்கள். அப்படியென்றால் பெண்களால் ஆண்களுக்கு துன்பமே வந்ததே இல்லையா? அதற்காக எப்போதாவது ஆண்கள் ஐயோ பெண்களால் எங்களுக்கு துன்பம் என்றும் பெண்ணாதிக்கம் , ஆண் விடுதலை என்றும் கோஷம் போட்டுக்கொண்டு அலைகிறர்களா? இல்லையே ...! அப்படியிருக்க, உங்களுக்கு மட்டும் ஏன் எந்த கொலை வெறி? ( வடிவேல் பாணியில் வாசிக்கவும்).
ஒரு மனிதப் பிராணி... அது ஆணோ பெண்ணோ இருவருக்கும் எதிர்ப்பாலால் மட்டுமல்ல எந்த உலகத்தின் பல காரணிகளால் பல்வேறு துன்பங்கள் வரத்தான் செய்கின்றன. நம் தேவைகளை நிறைவேற்ற முயலும் போது அருமையான வளங்களை கொண்ட இந்த பஞ்ச பூமியில் துன்பப்பட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது. அதற்காக சும்மா... சும்மா...ஆண்கள் வில்லன்கள் ...நாங்கள் எல்லாம் உத்தம பத்தினிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காதிர்கள். உங்களிலும் 'நீலாம்பரிகள்' இருக்கத்தான் செய்கிறீர்கள். சொல்லப் போனால் தப்பு செய்யாத மனித பிறவி யாருமே இல்லை.


எப்போதாவது ஒரு குறிப்பிட்ட பெண் உங்களுக்கு அநியாயம் செய்தால் பெண் குலமே இப்படித்தான் என்று எழுந்து போராடியிருக்கிறீர்களா? ...இல்லைத்தானே...?!
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆண் உங்களுக்கு எதிராக குற்றம் செய்கிறான்...அநியாயம் செய்கிறான் என்றால் அவனுக்கு எதிராக மட்டுமே வேலை செய்யுங்கள். தைரியத்துடன் தட்டிக் கேளுங்கள். அதை விட்டு விட்டு ஆண்களே இப்படித்தான் என்று அழகழகான வரிகளில் கட்டுரை எழுதாதீர்கள். ...உங்கள் அப்பாவும் அண்ணாவும் பாவம் அல்லவா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?!

Wednesday, April 9, 2008

உங்கள் சிந்தனைக்கு...!

ஏமாந்தால் தப்பா?
ஒருவன் யாரிடமாவது ஏமாந்து விட்டால் ஏமாந்தவனை ஏமாளி, முட்டாள் என கேவலமாகவும் ஏமாத்தியவனைஅவன் புத்திசாலி எனவும் பாராட்டுவது நமது வாடிக்கையாக போய் விட்டது. ஒருவன் அப்பாவியாக அதாவது நல்லவனாக இருப்பது தப்பா?

உலக அழகி


உலகுக்கு ஐஸ்வர்யா ராய் ...உனக்கு உன் காதலி....அப்படித்தான் சொல்ல வேண்டும்...நீ ஒரு காதலனாக இருந்தால் அல்லது ஒரு காதலனாக தொடர்ந்து இருக்க விரும்பினால் ...!
ஆனால் அழகு என்பதை நாம் சில விதிகளினால் அளவிட்டுவிட முடியாது. இடுப்பு இந்தளவுதான் இருக்க வேண்டும் ...இப்படித்தான் நடக்க வேண்டும்...என்பதெல்லாம் ஒரு இயந்திர அளவுகோல்கள். அழகிகளை தேர்வு செய்யும் நீதிபதிகளுக்கு கூட அவர்களை முழுமையாக பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான்...!

Thursday, April 3, 2008

நான் யார்?


நிச்சயம் நமது பெயர் அல்ல...வேண்டாம்...இதுக்காக பெரும் தத்துவவாதிகளிடம் அலைய வேண்டாம். நெஞ்சை அறையும் உண்மை விடை...தீனி கொடுக்க கொடுக்க பசித்துக்கொண்டே இருக்கும் இரு உறுப்புக்களை கொண்ட சாதாரண மனிதப் பிராணி...

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?