Saturday, June 21, 2008

ஏதாவது எழுத...

ஏதாவது எழுத வேண்டுமென ஆசைப்படுகிறேன். ஒன்றும் முடியவில்லை. முன்பெல்லாம் நிறைய கற்பனைகள், கதைகள், கவிதைகள் என்று மனதில் குவியும். சிலதை எழுத்திலும் எழுதிவிடுவேன். ஆனால் வெளியிடுவதற்கு எவனும் தயாராய் இருக்க மாட்டான். ஆனால் இப்போது எவ்வளவு எழுதிக் குவித்தாலும் எப்போது கொடுத்தாலும் ஏன் 'என்ன' கொடுத்தாலும் (!) வெளியிடுவதற்கு தயாராய் இருக்கும் ஒருவன் கிடைத்தும் எழுத முடியவில்லை. ஏதாவது எழுத நினைத்தால் அதையெல்லாம் யாரோ முன்பே எழுதி விட்டது போல தோன்றும். அல்லது நான் எழுத நினைக்கும் கருத்துக்கு எதிராகவே எனக்குள்ளேயே பல கருத்துகள் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன எழுதி கிழித்து விடப் போகிறாய்...அல்லது என்ன புதுமையான விஷயத்தை நீ சொல்லப் போகிறாய் என விரல் நீட்டுகின்றன.


சில நேரங்களில் அதிகம் படித்தால் மூளை குழம்பி விடும் என்பார்கள். அதே போல அதிகம் வாசித்தால் எந்தக் கருத்து சரி எது பிழை என்பது புரியாமல்
போய்விடுமோ? உதாரணமாக கடவுள் இல்லை என்று எழுத ஆசைப்படுகின்றேன். ஆனால் ஏதோ ஒன்று பின்னால் நின்று கையை இழுத்து தடுக்கிறது. என்ன அது? சின்ன வயதிலிருந்தே எனக்குள் வளர்த்து விடப்பட்டிருக்கும் கடவுள் பயமா? அல்லது எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை எதிர்ப்பதற்கு தயக்கமா? வட்டத்திலிருந்து வெளியே வந்தால் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற பயமா?அல்லது உண்மையிலேயே என் கருத்தில் எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்பதாலா? அல்லது...அல்லது...அந்தக் கடவுளே தடுக்கிறாரோ...?!


ஐயோ...குழப்பம்...குழப்பம்...மஹா குழப்பம்...ஆனால் ஒன்று ...எவருமே தாங்கள் அடித்துச் சொல்லும் கருத்தில் ஒரு பத்து வீதமாவது அடிமனதில் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இக்கருத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...!

கடவுள் இருக்கிறாரா ...இல்லையா...? உலகத்திலேயே மிகப் பழமையான வாதப் பிரதிவாதம் இதுவாகத்தான் இருந்திருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றை அடித்துச் சொல்ல என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் மிகச் சத்தியமாக அடித்துச் சொல்கிறேன். அப்படி ஒருவர் இருந்தால் முதன் முதலில் நரகத்தில் தள்ளப்பட வேண்டிய நபர் அவர்தான் ! எனக்கு கடவுளை பிடிக்காது. எங்களை நல்லவனாக இரு இரு என்று சொல்லிக்கொண்டே இருக்கிற தவறெல்லாம் அவர்தான் செய்திருக்கிறார், செய்து கொண்டு இருக்கிறார். உங்களிடம் எனக்கென்ன பேச்சு...? நான் கடவுளிடமே நேரடியாக கேட்டு விடுகிறேன் . கடவுளே...உண்மையிலேயே நீர் இருந்தால் இந்த எழுத்தெல்லாம் உம் முன் வாசிக்கப்படும் தானே...என் கேள்விகளுக்கு பதில் சொல்லும்... நீர் தெரிந்தோ தெரியாமலோ கடவுளாகி விட்டீர். அல்லது கடவுளாகவே இருக்கிறீர். இந்த அளவில்லாத சக்தி எப்படி உமக்கு கிடைத்தது ...எங்கிருந்து கிடைத்தது. ...உமக்கு எப்படி ஆதியும் அந்தமும் இல்லாமற் போகும்...என்பது போன்ற உமது சொந்த விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் எங்கள் உலகத்தை நீர்தான் படைத்தீராம்...அதை ஆள்கிறீராம்...நிறைய விதிகள் கட்டுபாடுகள் எல்லாம் விதிக்கிறீராம்...கடைசியில் நீதிமன்றம் எல்லாம் வைத்து எங்களுக்கு தண்டனை வேறு கொடுக்கப் போகிறீராம். இப்படியெல்லாம் எங்கள் சொந்த விசயத்தில் நீர் தலையிடுவதால் உம்மிடம் நாக்குத் தெறிக்க ( என் நாக்கு தெறித்தாலும் பரவாயில்லை) நாலுகேள்வி கேட்கிறேன்... பதில் சொல்லும்...

உடனடி மகிழ்ச்சிக்கு...

ஹாய் ஹவ் ஆ யூ ? ஐ ஆம் இன் ஹப்பி மூட் நவ்...மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நம்புவீர்களா...? இதை எழுதுவதற்கு வந்து உட்கார சற்று முன்பு கூட நான் அவ்வளவு சந்தோஷ மூடில் இருக்கவில்லை. பின் இது எப்படி சாத்தியமானது? இசை...!இசை...!இசை...!ஹெட் போனுடாக என் காதினுள் பாய்ந்து கொண்டிருப்பது... 'பொல்லாதவன்' படத்தின் பொல்லாத ரி மிக்ஸ் 'எங்கேயும் எப்போதும்...' இசை வெள்ளம்... ஆகா... இந்த இசை தான் எப்படி ஒரே வினாடியில் நமது மனநிலையை மாற்றிப்போட்டு விடுகிறது...!
உடனடியாய் இசையை பற்றி ஒரு கவிதை வடிக்காவிட்டால் அதனால் இன்பம் பெற்றுவிட்டு அதனை ஏமாற்றிய ஒரு துரோகியாகிவிடுவேன்...இதோ... இதோ...
இசை...

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?