
உன்னைக் கடந்து போகும்
ஒவ்வொரு செக்கனும்

உனக்கே சொந்தமானவை.
உன் வரலாற்றுப் பதிவுகள்.
அவை எழுதினால் எழுதப்பட்டவைதான்.
திரும்பத் திருத்தப்பட முடியாதவை.
உன் வரலாறு இவ்வுலகில்
ஆயிரத்தில் ஒன்றா அல்லது
பத்தோடு பதினொன்றா என்பது
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னால் தீர்மானிக்கப்படுகிறது.
உன் கதையை திரைப்படமாக்கினால்
நீயே அதனை கொட்டாவி விடாமல்
பார்க்கக் கூடியவாறு பார்த்துக்கொள்.
உன் திரைப்படத்தில்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
எல்லாம் உன்னால் மட்டுமே
உருவாக்கப்பட வேண்டும்.
வெறும் நடிகனாக மட்டும் இருந்துவிடாதே...!